Thursday, November 20, 2008

Vaaranam aayiram - anal mele panithuli

அனல் மேலே பனி துளி 
அலைபாயும் ஒரு கிளி 
மரம் தேடும் மழை துளி
இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

எந்த காற்றின் அளாவலில் மலரிதழ்கள்  விரிந்திடுமோ 
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ 
ஒரு சிறு வலி இருந்ததுவே 
இதயத்திலே இதயத்திலே
உனது இரு விழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்  மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அது தான் இனி நிலாவின் கரை கரை

சந்தித்தோமே  கனாக்களில் 
சிலமுறையா   பலமுறையா 
அந்தி வானில்  உலாவினோம் 
அது உனக்கு நினைவில்லையா 

இரு தரைகளை  உடைத்திடவே 
பெருகிடுமா   கடல்  அலையே 
இரு இரு உயிர் தத்தளிக்கையில் 
வழி  சொல்லுமா  கலங்கரையே 
உனதலைகள் என்னை  அணைக்க 
கரை சேர்வதும்   கனாவில்  நிகழ்ந்திட  

No comments: